» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவர் : குடும்பத் தகராறில் பயங்கரம்!

சனி 25, மே 2024 10:42:44 AM (IST)

ஆத்தூர் அருகே கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த மனைவியை கணவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மாரி (33). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

இந்நிலையில் பொன்மாரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது கணவர் கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அவர் கள்ளத் தொடர்பை கைவிட வில்லயாம். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்மாரி உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory