» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கே.சின்னத்துரை தங்க மாளிகையில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை!
வெள்ளி 10, மே 2024 12:24:23 PM (IST)
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதன்காரணமாக தூத்துக்குடியில் உள்ள நகைக் கடைகளில மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், தென் மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது.
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு சலுகையாக கிராமுக்கு ரூ.150 தள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும், தங்கம் வாங்கிய அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனால் ஒரு வார காலமாக கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை மே 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.