» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!

வெள்ளி 10, மே 2024 11:36:14 AM (IST)

தூத்துக்குடியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதவாது: தூத்துக்குடி அருகில் உள்ள தருவைகுளம் 125 வீடு காலனி தெருவைச் சேர்ந்தவர் தொம்மை மகன் போஸ்கோ (27), மீனவர். இவருக்கு திருமணம் செய்வதற்கு பல இடங்களில் பெண் பார்த்தும் சரியான வரன் அமையவில்லையாம். 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து போஸ்கோ தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory