» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி ஷெட்டில் திருடிய ஊழியர் கைது

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 11:05:33 AM (IST)

தூத்துக்குடியில் லாரி புக்கிங் அலுவலகத்தில் டயர், ரிம் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சங்கரப்பேரி தனுஷ்கோடி நகரைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் பாஸ்கர் (50). இவர் அப்பகுதியில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார்.  கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்த டயர், ரிம் உள்ளிட்ட ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோய்விட்டது.

இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த அலுவலகத்தில் கிளார்க்காக வேலைபார்த்து வரும் மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த  நவராஜ் மகன் விஜயகுமார் (47) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து திருடப்பட்ட  பொருட்களை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory