» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய வளனாா் ஆலயத்திருவிழா துவங்கியது!
செவ்வாய் 30, ஏப்ரல் 2024 10:45:30 AM (IST)
தூத்துக்குடி அந்தோணியாா்புரம் மடத்தூா் தூய வளனாா் ஆலயத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், இரத்தினபுரம் பங்குதந்தை அமலதாஸ் தலைமையில், அந்தோணியாா்புரம் பங்கு தந்தை ஸ்டீபன் மாியதாஸ் முன்னிலையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கூடாரத்தை பங்குதந்தை ஸ்டீபன் மாியதாஸ் திறந்து வைத்தாா். தனி வட்டாட்சியர் ஞானராஜ் கல்வெட்டை திறந்து வைத்தாா். திருவிழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.