» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

திங்கள் 29, ஏப்ரல் 2024 10:07:19 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட களத்தில் பலியான 15 போராளிகளின் நினைவாக தூத்துக்குடியில் மணிமண்டபம் கட்ட கோரியும், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 22 ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்படுகிறது. இந்த மனு கொடுக்கும் நிகழ்வில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், அரசியல் கட்சியினர், துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில், தமிழர் விடியல் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory