» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவிலுக்கு தீவைப்பு: போலீஸ் விசாரணை!
ஞாயிறு 3, மார்ச் 2024 11:37:13 AM (IST)
ஆறுமுகநேரி அருகே கோவிலுக்கு தீவைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன்விளை கிராமத்தில் ஐயா வைகுண்டர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமி கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம ஆசாமி கோவிலில் விளக்கில் இருந்த எண்ணையை எடுத்து ரப்பர் சீட் மேல் கூரையில் ஊற்றி வைத்தாராம்.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தீ மளமளவென்று எரிந்ததில் கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன் (53) என்பவர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார். கோவிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
