» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி!

சனி 24, பிப்ரவரி 2024 10:40:30 AM (IST)

திருச்செந்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி அருகே உள்ள குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் சுடலைமணி (56). இவர் காயாமொழி திருச்செந்தூர் ரோட்டில் நடந்து வந்தபோது, அவ்வவழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். 

இதையடுத்து அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory