» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை!

சனி 24, பிப்ரவரி 2024 10:35:59 AM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள மணக்கரை ஆனந்தநம்பி குறிச்சி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சத்ரபதி மகன் இசக்கி முத்து (31). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிருந்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், குடும்பத் தகராறில் பிருந்தா குழந்தையுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த இசக்கிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory