» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதன் 31, ஜனவரி 2024 8:08:31 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று (31.01.2024) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி. எஸ். இராமன் ஆஜராகி, துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 தாசில்தார்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவது இந்த தருணத்தில் தேவையில்லை என்று வாதிட்டார்.
மேற்சொன்ன நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நாங்கள் தான் முடிவு செய்தோம் என நீதிபதிகள் தெரிவித்தபோது, நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை இப்போது வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வரவிருக்கின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில் கடந்த 18 அக்டோபர் 2022 அன்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விளைவாக ஆணையிடப்பட்டு அதிகாரிகளின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த தகவல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆகவே அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வேதாந்தா (ஸ்டெர்லைட்) குழுமத்தின் வழக்குகளில் ஆஜாராகாத வழக்கறிஞராக இருந்தால் சிறப்பு என்று மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தனது கருத்தைப் பதிவு செய்தார். வழக்கு பிப்ரவரி 21 மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 485 கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
திங்கள் 8, ஜூன் 2026 4:01:04 PM (IST)

இறையடியார் அந்தோனி சூசை நாதருக்கு புனிதர் பட்டம்: தூத்துக்குடியில் சிறப்பு பிரார்த்தனை!
திங்கள் 8, ஜூன் 2026 3:40:41 PM (IST)

தாட்கோ மூலம் அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சிகள் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 3:27:22 PM (IST)

அமைச்சர் ஸ்ரீநாத் வளர்ச்சியைப் பொறுக்காமல் அவதூறா? பாண்டியாபதி சங்கம் கண்டனம்!
திங்கள் 8, ஜூன் 2026 3:14:03 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 2பேர் கைது; மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 12:38:41 PM (IST)










