» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது!

செவ்வாய் 28, நவம்பர் 2023 8:50:54 PM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது  தூத்துக்குடி to திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஒரு உப்பு ஆலை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். 

அதில், அவர் தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்த ரசாரி மகன் மரிய அந்தோனி பிச்சையா டைட்டஸ் (25) என்பதும் அவர்  விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் எதிரி மரிய அந்தோனி பிச்சையா டைட்டஸ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரிய அந்தோனி பிச்சையா டைட்டஸ் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 8 வழக்குகளும், தெர்மல்நகர், தூத்துக்குடி மத்தியபாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 9 வழக்குகளும் என மொத்தம் 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory