» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:34:03 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினத்தை முன்னிட்டு நிலைக்காட்சி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டுக் கழகம், ஸீசைடு (Seaside) ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினத்தை முன்னிட்டு இன்று கல்லூரியின் இளங்கலை கல்வியியல் முதலாமாண்டு மாணவியருக்கு நிலைக்காட்சி போட்டி நடடைபெற்றது.
மாணவியர் பாலின ரீதியான வன்கொடுமை என்ற தலைப்பினை ஆறு குழுக்களாகப் பிரிந்து சமூகத்தில் நிலவும் மகளிருக்கு எதிராக நிலவும் வன்கொடுமைகளை நிலைக்காட்சிப்படுத்தினர். நடுவர்களாக சுரேஷ் மற்றும் சுப்பையா வித்யாலயம் பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியை திகலைச்செல்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவியருக்கு ஸீசைடு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜூடு விஜயன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் முரளிதரன், கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலின் சர்மிளா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் உதவிப் பேராசியருமான வினோதினி சில்வியா மற்றும் எமிமா ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)
