» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 28, நவம்பர் 2023 10:03:35 AM (IST)



புதூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா  கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் பழனி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் பார்த்திபன், சுயம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பழனி முருகன்  கூறுகையில் "பேரூராட்சி பகுதியில் கால்வாய், பொது மயானம், குடிநீர்வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட சரியான முறையில் பேரூராட்சி நிர்வாகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் மற்றும்  பாரதிய ஜனதாகட்சி சார்பில் பலமுறை  மனுஅழித்தும் எந்தவித பயனும் இல்லை என்று கூறினார். 

இதில், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, ஓபிசி அணி மாவட்ட செயலாளர் மகேஷ், புதூர் மகளிர் அணி பொதுச் செயலாளர் அஷ்டலட்சுமி, மற்றும் சென்றாய பெருமாள் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory