» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாலத்தீவில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சாலை மறியல் போராட்டம் வாபஸ்!
ஞாயிறு 26, நவம்பர் 2023 6:05:04 PM (IST)

மாலத்தீவில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை (நவ.27) அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவைகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக் 1ம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது புயலின் காரணமாக கடந்த 20.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டினால் படகுகளை விடுவிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு கூறி வந்தது.. ஆனால், பல கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டாத நிலையில், நவ 11 அன்று மாலத்தீவில் இருந்து 8 மீனவர்கள் நாடு திரும்பின.. மீதம் உள்ள 4 மீனவர்கள் படகை மீட்பதற்காக அங்குள்ளனர்.
கனிமொழி எம்பி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் படகை மீட்க வேண்டும் என தருவைகுளம் பொது மக்கள் மனு அளித்தனர். ஆனால் படகு மீட்கப்படவில்லை. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து உடனடியாக படகை மீட்க வேண்டும் என நாளை 27.11.2023 சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தருவைகுளம் கிராம மக்கள் அறிவித்தனர்..
இந்நிலையில், தருவைகுளம் அருட்தந்தை வின்சென்ட் இல்லத்தில் வைத்து மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், ஒட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், வருவாய்துறை அதிகாரி வாசுகி, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, கடலோர அமலாக்க பிரிவு ஆய்வாளர் உமையேரும் பாகம், தருவைகுளம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பேசிச்சுவார்தையில் ஈடுபட்டனர்..
பேச்சுவார்த்தையின் போது 20 நாட்களில் படகு மீட்கப்படும் என நம்பிக்கை அளித்தனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாளை நடைபெற இந்த சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










