» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பூசனூரில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்

ஞாயிறு 26, நவம்பர் 2023 1:22:43 PM (IST)



பூசனூரில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூசனூரில் 116 ஆவது தேவர் ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என 60க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மாட்டுவண்டி போட்டிகளை தொடங்கி வைத்தவர்கள். 

சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு  பூசனூர் மற்றும் சிங்கிலி பட்டி மாட்டு    வண்டியும், 2வது பரிசு ஓட்டப்பிடாரம் மாட்டு வண்டி, 3வது  பரிசு சொக்கலிங்கபுரம் மாட்டு வண்டியும் பெற்றன. பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு எட்டயபுரம் மற்றும் கம்பத்து பட்டி மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசு செக்காரக்குடி மற்றும் நொச்சிகுளம் மாட்டு  வண்டியும், மூன்றாவது பரிசு நொச்சிகுளம் மற்றும் புதூர் பாண்டியாரம் மாட்டுவண்டியும் பரிசுகளை பெற்றன. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள்  மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory