» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் இணைந்தனர்!!

புதன் 31, மே 2023 4:30:55 PM (IST)



சாயர்புரம் நடுவக்குறிச்சியை சேர்ந்த திமுகவினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  

தூத்துக்குடி சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுவைகுறிச்சி சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த திமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியை விட்டு விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை, சாயர்புரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் முத்துமாரி தங்கராஜ் ஏற்பாட்டில் பண்டாரவிளை அலுவலகத்தில் நேரில் சந்தித்து அதிமுக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். 

அவர்களுக்கு அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அதிமுக செயலாளர் காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணைத் தலைவர் விஜயன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்வி குமார், பெருங்குளம் பேரூராட்சி வார்டு செயலாளர் ஜெயமுருகன், எம்.எஸ். மணி,பெருங்குளம் நீர் பாசன சங்கத் தலைவர் சுடலை, ஒன்றிய கவுன்சிலர் நயினார், ஆண்டி, தேவாரம், பால்துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

Sunder milavillanJun 1, 2023 - 12:00:36 AM | Posted IP 172.7*****

Valthukal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory