» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீதிமன்ற உத்தரவினை மீறும் தனியார் சந்தை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சனி 27, மே 2023 8:32:22 AM (IST)

கோவில்பட்டியில் நீதிமன்ற உத்தரவினை மீறி செயல்படும் தனியார் தினசரி சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு  கட்டுமான பணிகள்  நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஒரு பிரிவினர் அரசு ஒதுக்கீடு செய்த கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக தினசரி சந்தையில் வணிகம் செய்து வருகின்றனர். மற்றொரு பிரிவினர் அரசு ஒதுக்கீடு செய்த இடத்திற்கு செல்லமால் திட்டங்குளத்தில் அவர்கள் வாங்கிய இடத்தில் தனியாக சந்தை தொடங்கியுள்ளனர். 

எவ்வித உரிய அனுமதியும் பெறமால் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருவதாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் நோட்டிஸ் வழங்கிய பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த காரணத்தினால் இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அடுத்த மாதம் 26ந்தேதி வரை தனியார் தினசரி சந்தை செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்ற உத்திரவினை மீறி தனியார் தினசரி சந்தை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

இதைக்கண்டித்தும். நீதிமன்ற உத்தரவினை அமுல்படுத்த வலியுறுத்தி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து,  ராஜேஷ் கண்ணா, திட்டங்குளத்தை  சேர்ந்த செந்தில்குமார்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவு குறித்து நகல் தங்களுக்கு வரவில்லை, வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சரவணன் தற்போது நீதிமன்ற உத்தரவு நகல் வழங்கியுள்ளார். 

எனவே இது  குறித்து கோட்டாட்சியருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நிதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தினை கைவிட்டனர்.நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின்னரும், தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருவது மட்டுமின்றி, அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

santhaiமே 28, 2023 - 05:32:08 AM | Posted IP 172.7*****

seyalpatta nallathu thana?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory