» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான காவியா தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் வழக்கம் போல் தொழிற்சாலையை திறப்பதற்காக அதன் ஊழியர் ஒருவர் அங்கு சென்றார்.தொழிற்சாலையை திறந்து உள்ளே சென்றபோது தீக்குச்சிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக தீப்பொறி நெருப்பும், புகையும் மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது தெரியவந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமானது.
தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் உள்ளே இருந்த தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகள் அடைக்கும் பெட்டிகள் எந்திரங்கள், மின் சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!
திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)

தயவுசெய்து இணையதளத்தில் படம் பார்க்காதீர்கள் : தூத்துக்குடியில் நடிகர் சூரி பேட்டி
திங்கள் 19, மே 2025 8:13:32 PM (IST)

அரசு மருத்துவர் பணி நீக்கம்: ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு
திங்கள் 19, மே 2025 5:44:03 PM (IST)

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 19, மே 2025 5:30:27 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை
திங்கள் 19, மே 2025 5:21:38 PM (IST)
