» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)



பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு வாபஸ் பெற்பட்டுள்ளதை வரவேற்று தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்கள் வகுப்புப் புறகணிப்பு போன்ற போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து உயர்கல்விதுறை அறிவிப்பின்படி தேர்வு கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

இதனை வரவேற்று தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் மாணவர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் மாதவன், பிரகாஷ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் வேல்சூர்யா,வெனிஸ்ட், ஆனந்த்,சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

SureshMar 22, 2023 - 08:57:04 AM | Posted IP 162.1*****

Congrats for the victory

m.sundaramMar 21, 2023 - 07:51:51 PM | Posted IP 162.1*****

Please pay attention to your study only.

tamilanMar 21, 2023 - 04:06:36 PM | Posted IP 162.1*****

Neenga pattasu vediththa kaasuku olunga thervu kattanathai kattirukalamada thambigala.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory