» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!

திங்கள் 6, பிப்ரவரி 2023 10:18:00 AM (IST)

தட்டார்மடம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள வாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் விஜயலட்சுமி (22), இவர் நாசரேத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிப்பு வராததால் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று கூறினாராம். ஆனால் அவரது தந்தை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

இதனால் மன வேதனையில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பவுல் லோஸ் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தறனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory