» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)

வேம்பார் வாலசமுத்திரபுரம் துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் விடுப்பில் உள்ள ஆசிரியையும் கலந்துகொண்டு நாட்டுப்பற்றை நிரூபித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பார் வால சமுத்திரபுரம் இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் 74 வது குடியரசு தினவிழா நடந்தது. ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார். கிராம தலைவர் சேர்மன் கொடியேற்றினார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான பால் சாமி சிறப்புரையாற்றினார். மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கலைநிகழ்ச்சி மற்றும் போட்டிகளை ஆசிரியைகள் ராஜலட்சுமி சிவகாமி ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.விழாவின் முத்தாய்ப்பாக விடுப்பில் இருந்து வரும் ஆசிரியை சரவணச்செல்வி குடியரசு விழாவில் கலந்து கொண்டு தனது நாட்டுப்பற்றை நிரூபித்து சக ஆசிரியைகள் மாணவர்கள் பொதுமக்களின் பாராட்டை பெற்றார். நடந்த குடியரசு தின நிகழ்வின் நிறைவில் தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகரில் நவ.30ம் தேதி மின்தடை!
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:00:50 PM (IST)

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 9:37:13 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:50:54 PM (IST)

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானிய, பாரம்பரிய உணவு திருவிழா!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:18:25 PM (IST)

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:10:47 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:34:03 PM (IST)
