» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி: இளஞ்சிறார் உட்பட 2பேர் கைது

ஞாயிறு 4, டிசம்பர் 2022 11:22:26 AM (IST)

தூத்துக்குடியில் மீனவரை கல்லால் தாக்கி கொல்ல முயன்றதாக இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தருவைகுளம், நவமணி நகரை சேர்ந்தவர் தாசன் மகன் அமல்ராஜ் (29). மீனவரான இவருக்கும் தாளமுத்து நகர், ஜே.ஜே., நகரைச்  சேர்ந்த முருகன் மகன் செண்பகராஜ் (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று டி.சவேரியார்புரத்தில் நடந்த திருவிழாவில் அமல்ராஜ் தனது அண்ணன் அந்தோணி மைக்கேல் என்பவருடன் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அங்குவந்த செண்பகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அமல்ராஜை சரமாரியாக கல்லால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அமல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, செண்பகராஜ் மற்றும் ஒரு இளஞ்சிறாரை கைது செய்தார். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory