» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் விரைவில் துவங்கும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு
வியாழன் 1, செப்டம்பர் 2022 3:36:22 PM (IST)
திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் விரைவில் துவங்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
![](https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/sekarbabu_1662028816.jpg)
இங்குள்ள பக்தர்களின சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படும். கோரிக்கையினை நிறைவேற்றும் பட்சத்தில் சுற்றுச்சுவர் உறுதித்தன்மையோடு கட்டப்படும். மேலும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருமண மண்டபம் வேண்டும் என்று அந்த பக்தர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள்.
அந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து தருவோம் எனக்கூறியிருக்கின்றோம். அதனைத்தொடர்ந்து அருள்பாலிக்கின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்றைக்கு புதிதாக அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுருக்கின்ற 5 நபர்கள் பொறுப்பேற்கின்ற பணியும் அதைத்தொடர்ந்து அறங்காவலர் தேர்வு செய்கின்ற பணியும் மிகுந்த மகிழ்ச்சியோடு நடந்தேறியிருக்கிறது. அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில்முருகன் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்.
அனைவரும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வெகு விரைவில் தொடங்க இருக்கின்றார்கள். முதலமைச்சர் திருச்செந்தூர் கோவில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்றத்திலே அறிவித்திருந்தார். திருப்பணிகளை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அவர்களின் இந்த முயற்சிக்கு மேலும் மேலும் மெருகூட்டி இந்த பணிகளை அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் விரைந்து முடிப்பார்கள் என்று திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்தில் இன்று மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் முழு முயற்சியில் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டத்தினுடைய மற்றொரு அமைச்சர் அவர்களும் இதில் ஆர்வத்தோடு திருப்பணியை முடிப்பதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கின்றார்கள். வெகு விரைவிலே முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதற்கு முழுமுதற் காரணம் முதலமைச்சர் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு; துவக்க நாளிலே முதலமைச்சர் எத்தனை காலங்களுக்குள் நிறைவேறும் என்று அறிவிப்பார். அந்த கால அளவிற்குள் முடிப்பதற்கு முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும். சொல்லாததையும், சொன்னதையும் செய்யும் அரசு இந்த அரசு என்பதை திருச்செந்தூர் கோயில் பணியில் நிரூபித்து காட்டுவோம். வெகு விரைவில் பக்தர்கள் தங்கும் விடுதிகளிலே உள்ள அறைகள் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/emp34o43i_1722056525.jpg)
நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது: ஆணைய உறுப்பினர்
சனி 27, ஜூலை 2024 10:30:48 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/crimescene_police_1722056230.jpg)
ராயன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்: 6பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 27, ஜூலை 2024 10:24:59 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/jailprisonarrest_1722055476.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் 107பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சனி 27, ஜூலை 2024 10:13:04 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/onlinejobarrest_1722055105.jpg)
ஆன்லைன் ஜாப் என்று கூறி ரூ.55 லட்சம் மோசடி : குஜராத்தைச் சேர்ந்த 2பேர் கைது!
சனி 27, ஜூலை 2024 10:07:01 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/spbalajisaravanantuty_1705923879_1722054668.jpg)
பனிமய மாதா திருவிழா: 10 இடங்களில் வாகன நிறுத்தம் - எஸ்பி தகவல்!
சனி 27, ஜூலை 2024 10:01:18 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/images (1)_1722010798.jpg)
தூத்துக்குடி நடு கடலில் படகு கவிழ்ந்தது : 7 மீனவர்கள் உயிருடன் மீட்பு
வெள்ளி 26, ஜூலை 2024 9:48:19 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/busstandroad_1721995183.jpg)