» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்கர்களை மணந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை : அதிபர் ஜோ பைடன் திட்டம்!
புதன் 19, ஜூன் 2024 4:11:28 PM (IST)
அமெரிக்கர்களை மணந்துள்ள அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க அதிபர் ஜோ பைடன் திட்டம் வகுத்துள்ளார்.

அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அவர்கள் அமெரிக்கர்களை மணந்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால், திங்கள்கிழமைக்கு (ஜூன் 17) பிறகு அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.
அந்த வகையில், ஜூன் 17-ஆம் தேதிக்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கர் ஒருவரை மணந்து, 10 ஆண்டுகளாக நாட்டில் தங்கியிருக்கும் எந்தவொரு அகதியும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 3 ஆண்டுகளில் அவர்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்காக (கிரீன் கார்டு) விண்ணப்பிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு தற்காலிக பணி உரிமமும் அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமார் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும், பின்னர் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர். அவர்களுடன் சேர்த்து, அமெரிக்கரை மணந்த ஒருவருக்குப் பிறந்து, நாட்டின் குடியுரிமை பெற முடியாமல் உள்ள சுமார் 50,000 சிறுவர் சிறுமியர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் நிரந்தர குடியேற்ற உரிமை பெற முடியும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் அவருக்கு முன்னர் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக அகதிகள் விவகாரமும் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறும் சூழலில், அகதிகள் வரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஜோ பைடன் எடுத்துவரும் அண்மைக் கால நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. அந்த நடவடிக்கைகளுக்கு அவரது சொந்தக் கட்சியிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் போலவே ஜோ பைடனும் இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், அகதிகள் விவகாரத்தில் தனது மிதவாதப் போக்கை வெளிப்படுத்தும் விதமாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் திட்டத்தை பைடன் வகுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் காராசாரமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு
திங்கள் 19, மே 2025 11:13:47 AM (IST)

வாடிகனில் போப் 14-ம் லியோ பதவியேற்பு: புனித பீட்டர் சதுக்கத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்!
திங்கள் 19, மே 2025 8:57:48 AM (IST)

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய இந்தியா விருப்பம்: டிரம்ப் சொல்கிறார்
ஞாயிறு 18, மே 2025 11:11:41 AM (IST)

ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்: ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 12:14:10 PM (IST)

லிபியாவில் 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டம்
சனி 17, மே 2025 11:57:22 AM (IST)

வங்கி கடன் மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது: நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி
வெள்ளி 16, மே 2025 12:47:48 PM (IST)
