» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : உலகத் தலைவர்களுடன் சந்திப்பு!
வெள்ளி 14, ஜூன் 2024 3:59:35 PM (IST)

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை சந்தித்தார்.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இரு தலைவர்களும் பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி,கல்வி, பருவநிலை மாற்றம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர். உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதன் பிறகு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கையும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்தார். இத்தாலி அதிபர் உள்ளிட்ட பல உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு
திங்கள் 19, மே 2025 11:13:47 AM (IST)

வாடிகனில் போப் 14-ம் லியோ பதவியேற்பு: புனித பீட்டர் சதுக்கத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்!
திங்கள் 19, மே 2025 8:57:48 AM (IST)

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய இந்தியா விருப்பம்: டிரம்ப் சொல்கிறார்
ஞாயிறு 18, மே 2025 11:11:41 AM (IST)

ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்: ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 12:14:10 PM (IST)

லிபியாவில் 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டம்
சனி 17, மே 2025 11:57:22 AM (IST)

வங்கி கடன் மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது: நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி
வெள்ளி 16, மே 2025 12:47:48 PM (IST)
