» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)
காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை மட்டுமே திறந்துவிடும் கர்நாடகா, ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து வந்தது.
இந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் திறக்க அடம்பிடித்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த நல்ல மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தமிழகத்தின் உரியப் பங்கை வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை நாளை மறுநாள் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது கண்டனத்திற்கு உள்ளாவதைத் தவிர்க்கவே, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையிலான கர்நாடக நீர்வளத்துறை அவசர அவசரமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)








