» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய பணி நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கியிருந்தார்.
இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சீனி அகமது உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு, அரசு பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், "அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது; எனவே மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "மாநில அரசு கருணை அடிப்படையில் பணி வழங்க விரும்பினால் உயர்நீதிமன்றத்திற்கு அதில் என்ன பிரச்சனை? வேலைவாய்ப்பு தொடர்பாகப் பொதுநல வழக்குத் தொடர முடியாது" என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், பின்வரும் கேள்விகளையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. கருணை அடிப்படையில் பணி வழங்கக்கூடாது என்று கூற உயர்நீதிமன்றத்திற்கு என்ன உரிமை உள்ளது?
"பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி அவசியம். ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் அரசு வேலையும் வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? துயரச் சம்பவத்தில் குடும்பத்தின் ஒரே வாழ்வாதார உறுப்பினர் இறந்துவிட்டால், அரசு அவரது மகனுக்கோ மகளுக்கோ வேலை வழங்கக் கூடாதா? கரூர் நெரிசல் சம்பவம் என்பது ஒரு துயரச் சம்பவம்; இதில் அரசியல் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)








