» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வில் உச்சக்கட்ட தொழில்நுட்பக் கோளாறு : நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!

சனி 20, ஜூன் 2026 12:05:32 PM (IST)


இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட்-யுஜி மறுதேர்வு நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ள நிலையில், நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட சர்ச்சை எழுந்துள்ளது. 

இத்தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட தேசிய தேர்வு முகமை, அந்த மாணவருக்கு உடனடியாக நாக்பூரிலேயே புதிய தேர்வு மையத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு விவகாரம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி (நாளை) மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, தேர்வர்களுக்குப் புதிய ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், நாக்பூரைச் சேர்ந்த நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட புதிய ஹால் டிக்கெட்டில், இந்தியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், வெளிநாட்டிற்குப் பயணம் செய்யக் குறைந்த நேரமே உள்ளதாலும், இந்த எதிர்பாராத ஒதுக்கீடு மாணவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாலும் உடனடியாகத் தேசிய தேர்வு முகமையிடம் (NTA) அவசர முறையீடு செய்தனர். மாணவருக்கு நாக்பூரிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சர்வதேச அளவிலான தேர்வு மையச் சர்ச்சை குறித்துப் பதிலளித்த தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங், மாணவரின் உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தினார்.

ஹால் டிக்கெட்டில் அபுதாபியில் தேர்வு மையம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்த தவறைத் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. கணினியில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறால் (Technical Snag) இந்தத் தவறு நடந்துவிட்டது என்றும், இதனால் மாணவர் யாரும் அபுதாபிக்குச் செல்ல வேண்டாம் எனவும் தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், அந்த மாணவரின் சொந்த ஊரான நாக்பூரிலேயே புதிய தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான திருத்தப்பட்ட புதிய ஹால் டிக்கெட் உடனடியாக மாணவருக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் தொழில்நுட்பச் சர்ச்சை குறித்துத் தேசிய தேர்வு முகமை உயர்மட்ட விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory