» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவை நெருங்குகிறது பொருளாதாரப் புயல் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

செவ்வாய் 19, மே 2026 5:39:28 PM (IST)

"இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பைத் தகர்க்கக் கூடிய ஒரு மாபெரும் 'பொருளாதாரப் புயல்' நாட்டை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதானி - அம்பானி சார்ந்த மத்திய அரசின் இந்த தற்காலிகப் பொருளாதாரக் கட்டமைப்பு விரைவில் வீழ்ச்சியடையப் போவதுடன், இதனால் ஏழை எளிய சாமானிய மக்களே மிகக் கொடூரமாகப் பாதிக்கப்படப் போகிறார்கள்" என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எச்சரித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி குறித்துப் பல்வேறு அதிரடி வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக எரிபொருள் (பெட்ரோல், டீசல்) விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பையே பிரதமர் மோடி தலைகீழாக மாற்றிவிட்டார். நாட்டை நோக்கி ஒரு பெரும் பொருளாதாரப் புயல் வந்து கொண்டிருக்கிறது என்று நான் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து எச்சரித்து வருகிறேன்.

மத்திய அரசின் தற்போதைய கார்ப்பரேட் ஆதரவுப் பொருளாதாரக் கட்டமைப்பு இனி நீண்ட காலம் நீடிக்காது, அது நிச்சயம் ஒருநாள் முற்றிலும் வீழ்ச்சியடையும். இதில் மிகத் துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இந்த வீழ்ச்சியால் ஏற்படப் போகும் பொருளாதார அதிர்ச்சி அதானி, அம்பானி அல்லது பிரதமர் மோடியை எவ்விதத்திலும் பாதிக்காது; மாறாக, ஏழை எளிய மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும்தான் மிக ஆழமாகப் பாதிக்கும். இது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் கடினமான காலத்தை மக்களுக்குக் கொண்டு வரப் போகிறது."

"நாட்டின் பொருளாதாரப் புயலைத் தடுத்து மக்களைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, பிரதமர் மோடி முற்றிலும் முரணாகச் செயல்பட்டு வருகிறார். இந்தியப் பொதுமக்களை வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் பிரதமர், அவரோ தற்போது ஒரு நீண்ட உலகச் சுற்றுப் பயணத்தில் (ஐரோப்பியப் பயணம்) சொகுசாக இருந்து வருகிறார்.

நாட்டில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துமாறு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார். இங்கு மின்சார வாகனங்கள் ஒரு பிரச்சினையே அல்ல; இந்தியாவின் உண்மையான அச்சுறுத்தல் என்பது விண்ணைத் முட்டும் பணவீக்கமும் (Inflation), இளைஞர்களை வாட்டும் வேலையின்மையும்தான் (Unemployment). இந்த அடிப்படைப் பிரச்சினைகளை விடுத்துப் பிரதமர் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை" என்று ராகுல் காந்தி சாடினார்.

விவசாயிகளுக்கான உரப் பற்றாக்குறை ஆபத்து: தொடர்ந்து பேசிய அவர், "மிக விரைவில் இந்திய விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உரங்களுக்குப்  பற்றாக்குறை ஏற்படப் போகிறது. இப்போதாவது பிரதமர் மோடி விழித்துக் கொண்டு நாட்டின் உழைக்கும் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் சிறு தொழில்முனைவோரைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

ஒரு பெரும் புயல் நெருங்குகிறது என்று நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், மோடி அதனை அலட்சியமாக ஒரு கேலியாகவே எடுத்துக் கொள்கிறார். நாட்டைப் பாதுகாக்காமல், அதற்குரிய கடமைகளைச் செய்யாமல் அவர் வேறு ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

thesa pakthaமே 20, 2026 - 04:25:07 PM | Posted IP 172.7*****

jai pagubali, vande mathram, jai sriram

தேசபக்தன்மே 20, 2026 - 07:04:12 AM | Posted IP 172.7*****

அவன் தாத்தா பாட்டி சேர்த்து வைத்த கோடிக்கணக்கான பணத்தை வச்சி உழைக்காமல் ஊர் ஊராக சுத்திட்டு கிடைக்குறான், நாம வேலையை பார்த்துட்டு தான் போகணும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory