» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கிறார் மம்தா : பெரும்பான்மையை விட பாஜக முன்னிலை!

திங்கள் 4, மே 2026 12:03:55 PM (IST)

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 294 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு தொகுதி தவிர்த்து 293 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 159 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

பபானிபூர் தொகுதியில் மம்தாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் முதல்வர் முகம் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார். நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போதைய நிலவரடி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதன்மூலம் மம்தா பானர்ஜி தலைமையிலான 14 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.

அண்மையில் அங்கு நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 89 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory