» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புனேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 65 வயது முதியவர் கைது!

சனி 2, மே 2026 3:36:16 PM (IST)

புனேயில்  4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டின் கீழ் 65 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம்புனே மாவட்டம் போர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதான முதியவர், அந்தச் சிறுமிக்கு உணவு தருவதாக ஆசைவார்த்தை கூறி அருகில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொடூரமாகக் கொலை செய்ததாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் தேடத் தொடங்கியபோது, அங்கிருந்த ஒரு வீட்டின் சிசிடிவி  கேமராவில் அந்த முதியவர் சிறுமியுடன் செல்வது பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த புனே (ஊரக) எஸ்பி சந்தீப் சிங் கில், "இந்த வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கு விரைவு நீதிமன்றத்தில் (Fast-track court) விசாரிக்கப்படும்" என்றும் உறுதி அளித்தார். கைதான நபர் மீது ஏற்கனவே 1998 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் குற்ற வழக்குகள் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory