» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:23:06 PM (IST)

நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில், குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு அறையில் கட்டுக்கட்டாகப் பணம் எரிந்து சாம்பலாகிக் கிடந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, யஷ்வந்த் வர்மா டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது: "நான் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த ராஜினாமாவை உடனடியாக அமலுக்கு வரும்படி செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையில் இந்தப் பதவியில் பணியாற்றியதை மரியாதைக்குரிய ஒன்றாகக் கருதுகிறேன்." இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது உறுதி: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:05:47 PM (IST)

கேரளத் தேர்தல்: அரசுக்கு எதிராகக் கருப்புச் சட்டை அணிந்து சாண்டி உம்மன் போராட்டம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:53:42 PM (IST)

கேரளம், அஸ்ஸாம், புதுவை தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:26:15 AM (IST)

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 5.25%ஆகத் தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 4:39:12 PM (IST)

மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:52:58 PM (IST)

சுங்கச்சாவடிகளில் புதிய விதிமுறை: ரொக்கப் பரிவர்த்தனைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:08:58 PM (IST)







