» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!
வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள சுனார் ரயில் நிலையத்தில் சோன்பத்ராவில் இருந்து வந்த கோமோ-பிரயாக்ராஜ் பர்வதி சோபன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 4-வது நடைமேடையில் வந்து நின்றது. அதில் இருந்து வந்த பக்தர்கள் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்கையில் புனித நீராட வாரணாசி செல்வதற்காக சுனார் ரயில் நிலையத்தில் இறங்கினர்.
பக்தர்கள் ரயில்வே நடைபாலத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக எதிர் திசையில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல ரயில் தண்டவாள பாதையை கடந்தனர். அப்போது அந்த ரயில் தடத்தில் வேகமாக வந்த ஹவுரா-கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் பல பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 6 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக போலீசார், ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் சவிதா (28) சாதனா (16), ஷிவ் குமாரி (12), அஞ்சு தேவி (20), சுசிலா தேவி (60), கலாவதி (50) என அடையாளம் காணப்பட்டனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, உடனடியாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்? திருச்சி சிவா கேள்வி
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:40:32 PM (IST)

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மான கடிதம் வழங்கிய இண்டியா கூட்டணி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:11:33 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் அளித்த குடும்பத்தினர் மீது வழக்கு: நாட்டிலேயே முதல்முறை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:34:56 AM (IST)










