» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் : அடுத்த கல்வியாண்டில் அமல்!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 11:33:46 AM (IST)
புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் சிபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றுடன் இணைந்து, மனப்பாடம் செய்வதிலிருந்து திறன் அடிப்படையிலான கற்றலுக்கு கவனத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் அளித்த குடும்பத்தினர் மீது வழக்கு: நாட்டிலேயே முதல்முறை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:34:56 AM (IST)

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:44:00 AM (IST)

10 முறை முதல்-அமைச்சர் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:55:32 PM (IST)










