» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு

செவ்வாய் 17, ஜூன் 2025 11:44:33 AM (IST)

ரயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடர்பாக பெங்களூருவில் உள்ள ரயில்வே தேர்வு வாரியத்திடம் கலந்து பேசி 51 பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களை அனைத்து மண்டலங்களும் திருத்தி, ஆன்லைன் அமைப்பில் பதிவேற்ற வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரம் ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இதைவிட அதிகம் உள்ளது என்றாலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ரயில்வே துறையில் ஊழியர்களுக்கு உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையை சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பராமரிப்பாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு இது சரியான நடவடிக்கை என்று கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory