» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

திங்கள் 17, மார்ச் 2025 5:34:02 PM (IST)



இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

5 நாட்கள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை உயர்மட்ட குழுவினர் வரவேற்றனர். இந்நிலையில், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை இன்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சந்தித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கிறிஸ்டோபர் லக்சன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors






Thoothukudi Business Directory