» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 30 முதல் மீண்டும் தொடக்கம்!

செவ்வாய் 18, ஜூன் 2024 5:31:47 PM (IST)

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 30 முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த மூன்று மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட மன் கி பாத் என்ற (மனதின் குரல் நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக ஆட்சியமைத்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிப்பரப்படுகிறது.

தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு மன் கி பாத் மீண்டும் தொடங்க உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி ஜூன் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

அனைவரும் உங்கள் யோசனைகளையும், உள்ளீடுகளையும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக நமோ செயலியில் எழுதவும் அல்லது 1800 11 7800 என்ற எண்ணில் உங்கள் செய்தியைப் பதிவு செய்யவும் என்று அவர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 25-ல் கடைசியாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education




New Shape Tailors





Thoothukudi Business Directory