» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குவைத் தீ விபத்தில் பலியான 31 பேரின் உடல்கள் கொச்சி வந்தடைந்தது!

வெள்ளி 14, ஜூன் 2024 11:03:41 AM (IST)



குவைத் தீ விபத்தில் பலியானவர்களில் 31 பேரின் உடல்கள், ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது.

கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.இதனைத் தொடர்ந்து, கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு சடலங்களை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 196 போ் வசித்து வந்த நிலையில், புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளத்தை சேர்ந்த 23 தொழிலாளர்களின் உடல்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வரும் பணியை மேற்கொள்வதற்காக மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் தலைமையிலான குழு நேற்று காலை குவைத் சென்றடைந்தது. இந்த நிலையில், 45 பேரின் உடல்களையும் இந்திய ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அந்த விமானத்திலேயே வெளியுறவுத் துறை இணையமைச்சர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளும் வந்தடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory