» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராமர் கோயிலுக்கு பூட்டு போடுவார்கள் எனக் கூறுவது அப்பட்டமான பொய் : பிரியங்கா

வியாழன் 9, மே 2024 4:27:50 PM (IST)

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பூட்டு போடுவார்கள் எனக் கூறுவது அப்பட்டமான பொய். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இந்நிலையில், ரேபரேலியில் பிரியங்கா கூறியதாவது: 400 தொகுதிகள் வெற்றி பெற பா.ஜ., விரும்புகிறது. இதனால் அவர்கள் எதிர்க்கட்சிகள் (இண்டியா கூட்டணி) ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள் எனக் கூறுகின்றனர். 

இது அப்பட்டமான பொய். காங்கிரஸ் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அசாதுதீன் ஓவைசி நேரடியாக பாஜவுடன் இணைந்து செயல்படுகிறார். பா.ஜ., எங்கு வேண்டுமானாலும் யாரையாவது வேட்பாளராக நிறுத்தட்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.,வை தோற்கடிக்கும் என தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் மிகவும் தெளிவாகிவிட்டது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory