» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்.29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து!

திங்கள் 2, அக்டோபர் 2023 11:53:48 AM (IST)

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திர மற்றும் சூரிய கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின் வைகானச ஆகம விதிப்படி சுத்தி செய்து ஆடைகள் அணிவித்து ஏழுமலையானுக்கு புண்ணியாவசனம் செய்து பின்னர் கோவில் நடை திறக்கப்படும். வருகிற அக்டோபர் 29-ந் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.22 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பு கோவில் மூடப்படுவது வழக்கம்.

எனவே அக்டோபர் 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு ஏகாந்தத்தில் சுத்தி மற்றும் சுப்ரபாத சேவை செய்த பிறகு அதிகாலை 3.15 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்படும். சந்திர கிரகணம் காரணமாக கோவில் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். சகஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory