» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்.29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து!
திங்கள் 2, அக்டோபர் 2023 11:53:48 AM (IST)
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திர மற்றும் சூரிய கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின் வைகானச ஆகம விதிப்படி சுத்தி செய்து ஆடைகள் அணிவித்து ஏழுமலையானுக்கு புண்ணியாவசனம் செய்து பின்னர் கோவில் நடை திறக்கப்படும். வருகிற அக்டோபர் 29-ந் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.22 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பு கோவில் மூடப்படுவது வழக்கம்.
எனவே அக்டோபர் 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு ஏகாந்தத்தில் சுத்தி மற்றும் சுப்ரபாத சேவை செய்த பிறகு அதிகாலை 3.15 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்படும். சந்திர கிரகணம் காரணமாக கோவில் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். சகஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதந்தோறும் 5 கிலோ இலவச தானியம் திட்டம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
புதன் 29, நவம்பர் 2023 5:44:26 PM (IST)

மணிப்பூரில் இணைய சேவை தடை மேலும் நீட்டிப்பு : மாநில அரசு உத்தரவு!
புதன் 29, நவம்பர் 2023 11:39:52 AM (IST)

சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41பேர் மீட்பு: 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது!!
புதன் 29, நவம்பர் 2023 10:22:38 AM (IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்
செவ்வாய் 28, நவம்பர் 2023 12:42:07 PM (IST)

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை மீட்க சுரங்கம் தோண்டும் நிபுணர்கள் வருகை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:26:28 AM (IST)

சுகாதார நல மையங்கள் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய மந்திர் என்று பெயர் மாற்றம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:18:11 AM (IST)
