» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)
மதுபான மோசடி வழக்கில், கைதான டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து, மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா பிறப்பித்த உத்தரவு: மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. மனுதாரர் செல்வாக்குமிக்கவர் என்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.