» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்களை ஏமாற்றி 93 பவுன், ரூ.9 லட்சம் மோசடி: பெண் எஸ்ஐ அதிரடி கைது!

வெள்ளி 28, ஏப்ரல் 2023 5:07:02 PM (IST)

கேரளத்தில் அதிக லாபம் தருவதாக கூறி 2 பெண்களை ஏமாற்றி 93 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் பெண் எஸ்ஐயை போலீசார் கைது செய்தனர். 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்யஸ்ரீ (47). அங்குள்ள வளாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் படித்த திருச்சூர் பழையன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்து, தனக்கு பணம் தந்தால் ஒரு வருடத்தில் அதற்கு கூடுதல் வட்டியும், லாபமும் தருவதாக கூறி இருக்கிறார். அதை நம்பி அந்த பெண் பல தவணைகளாக 93 பவுன் நகைகளையும், ரூ.1.5 லட்சம் பணத்தையும் ஆர்ய யிடம் கொடுத்துள்ளார். 

அதேபோல பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடமும் ரூ.7.5 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். பல வருடங்கள் ஆன பிறகும் 2 பேருக்கும் வட்டியையோ, லாபத்தையோ ஆர்ய  கொடுக்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஒற்றப்பாலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து எஸ்ஐ ஆர்ய யை கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory