» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 4:37:46 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாசரேத் மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கோயில் ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி போதை ஒழிப்பு திட்ட அலுவலர் பிரபாகர் வேதசிரோண்மணி, வேலைவாய்ப்பு அலுவலர் ஜான் வெஸ்லி, பர்சர் தனபால் ஆகியோர் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வை சிறப்பாக நடத்தினர். 

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோசம் தலைமையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளிகளின் தாளாளர் ரமா மற்றும் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜான் வெலிங்டன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory