» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்
புதன் 30, ஜூலை 2025 11:39:59 AM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளர் ரமா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார்.
சிவில் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஊழியர்கள் முகாமை நடத்தினர். மொத்தம் 262 பேர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


