» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்கதாக பாரத சாரணர் இயக்கம் பல்வேறு செயல் திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் திருச்சி மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்ற சாரணர் இயக்கத்தின் 75வது ஆண்டு விழா நிறைவு பெருந்திரள் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜோஸ்வா சாம்துரை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் ஜாகின் ஜோகித் பால் ஆகியோருக்கு மூன்று வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பொறுப்பாசிரியர்களாக மாணவர்களை அழைத்துச் சென்ற ஆபிரகாம் இம்மானுவேல் மற்றும் ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
