» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் ஊட்டச்சத்து விழா
வியாழன் 21, மார்ச் 2024 11:14:23 AM (IST)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் ஊட்டச்சத்து விழா நடந்தது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூ ரியில் ஊட்டச்சத்து விழா நடந்தது.கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமைவகித்தார்.மாணவி பிரிசில்லா வரவேற்றார்.
மாணவிகள் ஊட்டச்சத்தைப் பற்றி சிறப்புபாடல் பாடினர். மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்சோனியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை பார்வையிட்டு, மாணவ மாணவிகளுக்கு ஊட்டச் சத்து என்றால் என்ன என்ப தைப்பற்றியும், ஊட்டச்சத்து உணவுகளை எடுப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும்,சரிவிகித உண வின் முக்கியத்துவத்தை ப்பற்றியும் எடுத்துரைத்தார்.
மேலும் நான்காம் ஆண்டு மாணவிகள் தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்க ளிலும் உண்ணக்கூடிய உணவு வகைகளை தயார் செய்து அதனைப் பற்றி விளக்கினர்.இதில் ஆசிரி யர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவி கள் கலந்து கொண்டனர். மாணவி தனலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், முதல்வர் சோபியா செல்வராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.