» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருபெரும் விழா

புதன் 24, ஏப்ரல் 2024 11:18:35 AM (IST)



நாசரேத் தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விளையாட்டு விழா, ஆண்டு விழா என இருபெரும் விழா நடந்தது.

தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார்.நிறுவன தாளாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி வரவேற்றார்.ஓய்வு பெற்ற ஆசிரியை  வயலெட்  எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.இதையடுத்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளுக்கு 
 
விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் பிரைட்டி செல்வகுமாரி நடத்தினார். நிகழ்ச்சியை விரிவுரை யாளர் ஞானமலர் தொகுத்து வழங்கினார்.  இதில் குருவானவர்  எலிசபெத், தூய யோவான் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தாளாளர் வயோலா மார்கெட் , தலைமை ஆசிரியை ஜுலியற் ஜெயசீலி , தூய யோவான் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா,  ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெமிமா ராஜசேகர்  மற்றும் விரிவுரையாளர்கள், அலுவலர் கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory