» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் உலக புத்தக தினம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 5:42:00 PM (IST)



தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில்  உலக புத்தக தினம் மற்றும் ஆங்கில மொழி தினம் நடைபெற்றது. 

ELTAI Thoothukudi chapter அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் வாசிப்பு மன்றத்துடன் இணைந்து உலக புத்தக தினம் மற்றும் ஆங்கில மொழி தினம் ஆகிய இருபெரும் விழாக்கள் 23 ஏப்ரல் 2024 அன்று தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

மாணவிகள் ரேவதி மற்றும் பரிபுரண ஜெப்ரினா புத்தக விமர்சனம் வழங்கினர். மகேஸ்வரி சீனிவாசராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் கல்லூரி நூலகர் ர.பொன்செல்வியால் அவரது வாசிப்புப் பழக்கம் குறித்து சிறப்பு விருந்தினருடன் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் நூலகர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory