» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வஉசி கல்லூரியில் இணையவழி குற்றத் தடுப்பு முகாம்
சனி 19, மார்ச் 2022 8:00:37 AM (IST)
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் ஏபிசிவி சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், தில்லியில் உள்ள தேசிய இணையவழி பாதுகாப்பு அமைப்பின் இயக்குநா் காளிராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். இதில், இணையவழி குற்றங்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து மீள்வதற்கான சட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.