» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

கத்தார் நாட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் இயற்கை எரிவாயு தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ‘பர்சான்' ஆலை, ஈரான் - அமெரிக்கா போர் காரணமாகக் கடந்த 4 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அமைதி ஒப்பந்தம் உருவாகும் சூழலில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்ற போது எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுத் தீ பரவியது. இந்த கோர விபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் பலியாகினர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்தில் பலியானவர்களில் 3 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது:
பபித் (26): ராதாபுரம் தாலுகா பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த தங்கராஜா மகன்.
சுவின் (24): பணகுடி அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் மகன்.
சஜித்குமார் (25): பணகுடி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜா மகன்.
உடல்களைக் கொண்டு வரக் கோரிக்கை:
கடந்த ஜூன் 20 அன்று குடும்பத்தினருடன் போனில் பேசிய சஜித்குமார், ஜூன் 21 அன்று நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்த தகவல் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கத்தாரிலிருந்து விரைந்து சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ் மத்திய அரசுக்கும் இந்திய தூதரகத்திற்கும் அனுப்பியுள்ள மனுவில், விபத்தில் பலியான பபித், சுவின், சஜித்குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும், உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)








